search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரதிய ஜனதா கட்சி"

    • 2018ல் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 88 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது
    • காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த், ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்டவர் என்றார் ஒவைசி

    இந்தியாவின் 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து, இறுதி முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்பட உள்ளது.

    தெலுங்கானாவில் 2018-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 47 சதவீத வாக்குகளை பெற்று பாரத ராஷ்டிரிய சமிதி (அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி) 119 இடங்களில் 88 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சியை சேர்ந்த கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெறுகிறது.

    இந்திய தேசிய காங்கிரஸால் 19 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    நவம்பர் 30 அன்று தெலுங்கானா சட்டசபையில் உள்ள 119 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவிருக்கிறது. வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் வெல்வதற்கு அங்கு பாரதிய ராஷ்டிர சமிதியை தவிர, காங்கிரஸ், பா.ஜ.க., மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிகள் களத்தில் உள்ளன. பிரசாரத்தில் அனல் பறக்கும் விமர்சனங்கள் நடைபெறுவதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, வாக்கு சேகரிப்பின் போது ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பி.ஆர்.எஸ்., ஆகிய இரு கட்சிகளும் பா.ஜ.க.வுடன் மறைமுகமாக கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

    ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி, தெலுங்கானா தேர்தலில் ஐதராபாத்திற்கு உட்பட்ட 9 இடங்களுக்கு வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது. அங்குள்ள நம்பள்ளி தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் பிரசாரம் செய்தார்.

    அப்போது ராகுல் காந்திக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார்.

    காங்கிரஸ் குறித்து அவர் தெரிவித்ததாவது:

    பிறரை குற்றம் சாட்டும் முன் ராகுல் காந்தி கண்ணாடியில் தன்னை பார்த்து கொள்ள வேண்டும். 2019ல் 540 பாராளுமன்ற இடங்களுக்கு போட்டியிட தலைமையேற்ற ராகுல் காந்தியால் அக்கட்சிக்கு 50 இடங்கள் மட்டுமே நாடு முழுவதும் கிடைத்தது. இது ஏன்? நீங்கள் (ராகுல்) பிரதமர் மோடியிடம் இருந்து எவ்வளவு தொகையை பெற்றீர்கள்? மைனாரிட்டி ஆதரவாளர்கள் என சொல்லி கொண்டு, பாபரி மஸ்ஜித் தகர்ப்பிற்கு காரணமான சிவசேனையுடன் காங்கிரஸ் மகாராஷ்டிரத்தில் கூட்டணி வைத்திருக்கிறது. மைனாரிட்டிகளுக்கும் ஏழைகளுக்கும் குரலாக ஏ.ஐ.எம்.ஐ.எம். வளர்ச்சி பெற்று வருவதால் எங்களை கண்டு காங்கிரஸ் அஞ்சுகிறது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, இங்க் தெளிக்கப்பட்ட வெறும் காகிதம்; அதில் ஒன்றுமில்லை. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் திருமண திட்டத்தின்படி இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு பலன் கிடைக்குமே தவிர இஸ்லாமியர்களுக்கு பலன் எதுவும் இல்லை. எங்கள் ஆடைகளையும், தொப்பிகளையும் நோக்கி காங்கிரஸார் விரல் நீட்டும் போது அன்பு குறித்து அவர்கள் பேசுவதை எவ்வாறு ஏற்று கொள்ள முடியும்? தெலுங்கானாவில் அவர்கள் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி, ஆர்.எஸ்.எஸ். பின்னணியை கொண்டவர் என்பதை மறக்காதீர்கள்.

    இவ்வாறு ஒவைசி பேசினார்.

    • 2018ல் கே.சி.ஆர். கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது
    • கே.சி.ஆர். குடும்பத்தினரால் மாநிலம் முழுவதும் ஊழல் பரவி உள்ளது என்றார் ராகுல்

    தெலுங்கானாவில், வரும் நவம்பர் 30 அன்று அம்மாநில சட்டசபையின் 119 இடங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலின் முடிவுகள், டிசம்பர் 30 அன்று வெளியிடப்படும்.

    கடந்த 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில் - தற்போது பி.ஆர்.எஸ். என பெயர் மாற்றப்பட்டுள்ள (பாரத் ராஷ்டிர சமிதி) அப்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வென்றது. அதை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் ஆட்சியமைத்தார்.

    தற்போது அவருக்கு எதிராக தேசிய கட்சிகளான இந்திய தேசிய காங்கிரஸ் (INC) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவை மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன. இக்கட்சிகளை தவிர அசாதுத்தீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். (AIMIM) கட்சியும் போட்டியிடுகிறது.

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கம்மம் மாவட்ட பினபாகா மற்றும் வாரங்கல் மாவட்ட நரசம்பேட்டை பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு ஆதரவு தேடி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் வெற்றி எனும் புயலை எதிர்கொள்ள கே.சி.ஆர். தயாராக வேண்டும். மக்களாட்சியை கொண்டு வர காங்கிரஸ் உறுதி எடுத்துள்ளது. தெலுங்கானாவில் நிலவும் ஊழல் மக்களை சலிப்படைய செய்து விட்டது. பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள அனைத்து துறைகளையும் தன் குடும்பத்தின் வசம் வைத்து கொண்டு ஊழலை வளர்த்திருக்கிறார், கே.சி.ஆர். காங்கிரஸ் இலவசமாக ஏழைகளுக்கு அளித்த விவசாய நிலங்களை கே.சி.ஆர். அரசு டிஜிட்டல்மயமாக்கல் எனும் பெயரில் பதிவுகள் இல்லாமல் அழித்து விட்டது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், கே.சி.ஆர். குடும்பம் ஏமாற்றி அபகரித்து வைத்துள்ள செல்வத்தை மீட்டு மக்களுக்கு செலவு செய்வோம். தனி தெலுங்கானா அமைய பாடுபட்ட கட்சி காங்கிரஸ் கட்சிதான். ஐதராபாத் நகரை "மென்பொருள் துறை தலைநகர்" (IT Capital) என மாற்றியதும் காங்கிரஸ் கட்சிதான். தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டாலும் பா.ஜ.க., பி.ஆர்.எஸ்., மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். ஆகியவை மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளன.

    தெலுங்கானாவில் மக்களாட்சி அமைந்ததும், அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அகற்றப்பட்டு காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

    • பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது
    • இச்சம்பவத்தை எம்.எல்.ஏ. ஜெய்வீர் சிங் கவனிப்பதும் பதிவாகியுள்ளது

    பாரதிய ஜனதா கட்சியின் சித்தாந்த தலைவர்களில் ஒருவரான மறைந்த பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அலிகாரின் கோல் பகுதியில் ஸ்ரீராம் விருந்தினர் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை கோல் சட்டசபை உறுப்பினர் அனில் பராசர் ஏற்பாடு செய்திருந்தார். அம்மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சர், உயர் கல்வி அமைச்சர் மற்றும் முன்னாள் மேயர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

    இந்நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநிலத்தின் அலிகார் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான சதீஷ் குமார் கவுதம் (51). கலந்து கொண்டார். அப்போது மேடையில் அமர்ந்திருந்த சதீஷ், தனக்கு அருகே அமர்ந்திருந்த பா.ஜ.க.வின் பெண் சட்டசபை உறுப்பினர் ஒருவரின் தோளில் கை போட்டார். இந்த அநாகரீகமான செய்கையை அடுத்து அப்பெண் எம்.எல்.ஏ. தனது இருக்கையை மாற்றி அதே மேடையில் வேறொரு இடத்தில் அமர்ந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சி அங்கிருந்த சிலரால் வீடியோ காட்சியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், எம்.பி.யின் அத்துமீறலை அந்த பெண் எம்.எல்.ஏ. தடுக்க முற்படுவதும் இந்த சம்பவத்தை பா.ஜ.க.வின் பரோலி எம்.எல்.ஏ.வான தாகுர் ஜெய்வீர் சிங் கவனிப்பதையும் காண முடிகிறது.

    இந்நிகழ்ச்சி வைரலானதை தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி.யின் அநாகரீக செயலை பலரும் கண்டித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய ஊடக பொறுப்பாளர் சுரேந்திர ராஜ்புத், "இதுதான் கலாச்சார பெருமை பேசும் பா.ஜ.க.வின் உண்மையான கலாச்சாரம்" என விமர்சித்துள்ளார்.

    இதுவரை இச்சம்பவம் குறித்து பா.ஜ.க.வின் தரப்பிலிருந்து எந்த அறிக்கையோ அல்லது அந்த எம்.பி. மீது  என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்த செய்தியோ வரவில்லை.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் முதல் கூட்ட தொடரில் பெண்களுக்கு பாராளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளில் 33% இட ஒதுக்கீட்டிற்கான மசோதாவை பா.ஜ.க. கொண்டு வந்தது. ஆனால், மேடையில் பெண் எம்.எல்.ஏ.வை நிம்மதியாக அமர கூட விடவில்லை என இந்நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.

    • மாவட்ட தலைவர் அய்யப்பன் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பிரசார வாகனம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்டது.
    • பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து என் மண், என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை தொடங்கினார். இதற்காக குமரி மாவட்ட பாரதிய ஜனதா பொருளாதார பிரிவு சார்பில் மாவட்ட தலைவர் அய்யப்பன் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பிரசார வாகனம் ராமேஸ்வரத்திற்கு அனுப்பப்பட்டது.

    பா.ஜ.க. மாவட்ட தலைவர் தர்மராஜ் கொடியசைத்து வாகனத்தை வழி அனுப்பி வைத்தார். இந்த விழிப்புணர்வு பிரசார வாகனம் நடைபயணம் முடியும் வரை தொடர்ந்து அனைத்து இடங்களிலும் உலா வரும்.

    மாவட்ட பொதுச்செ யலாளர் வக்கீல் ஜெகநாதன், பொருளாளர் முத்துராமன், நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வீரசூர பெருமாள், மாநகர தலை வர்கள் ராஜன், வேணு கிருஷ்ணன், சிவசீலன், தோவாளை ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் வக்கீல் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முரளி மனோகர்லால், சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜ கோபால், மாவட்ட மகளிர் அணி தலைவி சத்திய ஸ்ரீ ரவி மற்றும் பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தாரகை கத்பர்ட் எச்சரிக்கை
    • குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் தாரகை கத்பர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாட்டில் பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதை அவர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் காலூன்ற முடியுமா என்ற நட்பாசையுடன் பாஜக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. பாஜக மக்கள் மத்தியில் மதத்தை வைத்து மறுப்பு அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

    இப்படிப்பட்ட கட்சியால் எப்படி நாட்டில் ஒற்றுமையை கொண்டு வர முடியும். ஒவ்வொரு மாநிலத்திலும் பண பலத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து அங்கு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார்கள்.

    பாஜகவின் மோசமான ஆட்சியினால் இன்றைக்கு பொருளாதாரம் படுபாதாளத்தில் சென்றுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் பெருகி கொண்டிருக்கிறது.கேஸ் விலை எங்கோ சென்று விட்டது.

    அதை முதலில் குறைத்து பெண்கள் நிம்மதியாக வாழ வழிவகை செய்யுங்கள்.ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100 ஐ தாண்டி விட்டது அதை சரி செய்யுங்கள்.

    மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியை தேவையில்லாமல் அவதூறாக பேசினால் பாஜக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • பாரதிய ஜனதா கட்சியினருக்கு கண்டனம்
    • அமைச்சர் மனோதங்கராஜ் பற்றி அவதூறு பரப்புவோர் மீது வழக்கு

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி யளித்தார்‌. அப்போது அவர் கூறியதாவது:

    மக்களால் தேர்வு செய்யப்பட்டு பத்மநாபபுரம் தொகுதியில் இருந்து 2-வது முறையாக வெற்றி பெற்று, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மந்திரிசபையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ள மனோ தங்கராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு குமாரகோவில் முருகன் கோவிலில் தேர் திருவிழாவில் வடம் பிடிக்க சென்ற போது வேண்டுமென்றே பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது.

    கடந்த ஆட்சியில் திருக்கோவில்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட இந்த ஆட்சியில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பா.ஜனதா கட்சியினர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தி.மு.க. ஆட்சியில் ரூ.43 கோடி குமரி மாவட்டத்தி லுள்ள திருக்கோயில்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக பிரசித்திபெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்கு மூலவருக்கு தங்க கவசம் செய்ய ரூ10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாகர்கோவில் நாகராஜா கோயில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிதாங்கோடு மகாதேவர் கோவில் உள்பட பல்வேறு கோயில்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இந்த ஆண்டு இதுவரை 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் குமரி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதை பாரதிய ஜனதாவினரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் வீண் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். தி.மு.க. ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்று பரப்பி வந்தவர்களால் அதிக நிதி ஒதுக்கியதால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

    இதை வைத்து அரசியல் செய்கிறார்கள். அமைச்சர் பற்றி வீண் வதந்திகளை பரப்புவோர் மீது முறையாக புகார் கொடுத்து வழக்கு தொடர்வோம். தமிழகத்தில் தற்போது பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில் மாநகராட்சியை பொருத்த மட்டில் அரசின் கொள்கை முடிவு படி தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது. மண்டலங்கள் மாற்றப்படவில்லை.

    நாகர்கோவில் நகரில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைபணிகள் கடந்த மாதம் 31ம் தேதி முடிப்பதாக தெரிவித்தனர்.

    ஆனால் சில பணிகளின் காரணமாக பணிகள் முடிக்கப்படவில்லை. தற்பொழுது சவேரியார் ஆலயம் முதல் செட்டிகுளம் சந்திப்பு வரை உள்ள சாலையில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

    இன்னும் 2 மாத காலத்துக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் .இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசால் மாநில உரிமைகள் அனைத்தும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தாங்கள்தான் எதிர்க்கட்சி என பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளத்தில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி தலைமையில் மாநில உரிமைகள் மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கி. வீரமணி பேசியதாவது, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசால் மாநில உரிமைகள் அனைத்தும் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறது. எனவே இதனை மீட்டு எடுப்பதே திராவிட மாடல் ஆட்சி ஆகும்.

    மாநிலம் என்றால் மக்கள், மக்கள் உரிமை, மனித உரிமை என்பதே, தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தாங்கள்தான் எதிர்க்கட்சி என பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் எப்போதும் தமிழகத்தில் ஒரு கட்சியாக தான் இருக்க முடியும்.

    எதிர்க்கட்சியாகவோ, ஆளுங்கட்சியாகவோ வர முடியாது. சொந்தக்காலில் நிற்கும் கட்சிகள் தான் தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவும், ஆளும் கட்சியாகவும் இருக்க முடியும். மிஸ்டு காலில் கட்சி நடத்துபவர்கள் எப்பொழுதும் எதிர்க்கட்சியாக வர முடியாது . சமத்துவ சிந்தனை, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி உள்ளிட்ட பெரியாரின் சிந்தனையால் தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக உள்ளது.

    100 ஆண்டுகள் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தி.மு,க வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன் மற்றும் திராவிட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ×